இரண்டு ஓணான்கள்
இரண்டு ஓணான்கள் ஓர் இடத்தில் கூடிப் பேசிக்கொண்டிருந்தன. ஒன்று, "நம்முடைய ஜன்மம் என்ன ஜன்மம்! இது ஒரு வாழ்வா? ஏதோ தின்கிறோம், வாழ்கிறோம், அவ்வளவுதான். நமக்கு ஒரு பெயர் உண்டா? மதிப்பு உண்டா? நம்மைப் பற்றி ஒருவர் பேசுவது தான் உண்டா? ஒரு கலைமானாக நான் பிறந்திருக்கக்கூடாதா? அப்படிப் பிறந்தாலாவது ராஜாக்களின் தோட்டங்களில் உலாவலாமே!" என்று சொன்னது.
இப்படி அவை பேசிக்கொண்டிருந்தபோது ஒரு கலைமானை இரண்டு வேட்டை நாய்கள் விரட்டிக்கொண்டு வந்தன. ஓணான் இருந்த இடத்திற்கு முன்னால் கலைமான் வந்தபோது நாய்கள் நெருங்கி அதைக் கவ்விப் பிடித்து அங்கேயே குதறித் தள்ளின.
இதைப் பார்த்த மற்றொரு ஓணான், "இந்த வாழ்வையா வேண்டுமென்று விரும்பினாய்? இந்த மானின் கதியைப் பார்த்த பின்பாவது உள்ளதைக் கொண்டு திருப்பதியடையும் நல்ல குணத்தைப் பெறுவாயாக" என்று சொல்லியது.
உள்ளதைக் கொண்டு திருப்பதியடைவதுதான் உயர்ந்த குணம்.
No comments:
Post a Comment