Tamil FM

Tamil FM

Thirukural

1 அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு

2 கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின்

3 மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்

நிலமிசை நீடுவாழ் வார்

4 வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு

யாண்டும் இடும்பை இல

5 இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்

பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு

6 பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க

நெறிநின்றார் நீடுவாழ் வார்

7 தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்

மனக்கவலை மாற்றல் அரிது

8 அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்

பிறவாழி நீந்தல் அரிது

9 கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்

தாளை வணங்காத் தலை

10 பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

இறைவன் அடிசேரா தார்

11

வான்சிறப்பு

வான்நின்று உலகம் வழங்கி வருதலால்

தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று

12

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்

துப்பாய தூஉம் மழை

13

விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து

உள்நின்று உடற்றும் பசி

14

ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்

வாரி வளங்குன்றிக் கால்

15

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே

எடுப்பதூஉம் எல்லாம் மழை

16

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே

பசும்புல் தலைகாண்பு அரிது

17

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி

தான்நல்கா தாகி விடின்

18

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்

வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு

19

தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்

வானம் வழங்கா தெனின்

20

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்

வான்இன்று அமையாது ஒழுக்கு

21

நீத்தார் பெருமை

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து

வேண்டும் பனுவல் துணிவு

22

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து

இறந்தாரை எண்ணிக்கொண் டற்று

23

இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்

பெருமை பிறங்கிற்று உலகு

24

உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்

வரனென்னும் வைப்பிற்கோர் வித்து

25

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்

இந்திரனே சாலுங் கரி

26

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்

செயற்கரிய செய்கலா தார்

27

சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்

வகைதெரிவான் கட்டே உலகு

28

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து

மறைமொழி காட்டி விடும்

29

குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி

கணமேயும் காத்தல் அரிது

30

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர் க்கும்

செந்தண்மை பூண்டொழுக லான்

31

அறன்வலியுறுத்தல்

சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு

ஆக்கம் எவனோ உயிர்க்கு

32

அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை

மறத்தலின் ஊங்கில்லை கேடு

33

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே

செல்லும்வாய் எல்லாஞ் செயல்

34

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்

ஆகுல நீர பிற

35

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்

இழுக்கா இயன்றது அறம்

36

அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது

பொன்றுங்கால் பொன்றாத் துணை

37

அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை

பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை

38

வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்

வாழ்நாள் வழியடைக்கும் கல்

39

அறத்தான் வருவதே இன்பம் மற் றெல்லாம்

புறத்த புகழும் இல

40

செயற்பால தோரும் அறனே ஒருவற்கு

உயற்பால தோரும் பழி

41

இல்லறவியல்

இல்வாழ்க்கை

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்

நல்லாற்றின் நின்ற துணை

42

துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும்

இல்வாழ்வான் என்பான் துணை

43

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு

ஐம்புலத்தாறு ஓம்பல் தலை

44

பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை

வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்

45

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது

46

அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்

போஒய்ப் பெறுவ தெவன்?

47

இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்

முயல்வாருள் எல்லாம் தலை

48

ஆற்றின் ஒழுக் கி அறனிழுக்கா இல்வாழ் க்கை

நோற்பாரின் நோன்மை உடைத்து

49

அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்

பிறன்பழிப்ப தில்லாயின் நன்று

50

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உநற்யும்

தெய்வத்துள் வைக்கப் படும்

Wednesday, April 14, 2010

திருக்குறள்

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை



விளக்கம்: மக்கள் தன்னை ஏர் கொண்டு உழுதுக் காயப்படுத்தினாலும் அதைப் பொறுத்துக் கொள்ளும் பூமியைப் போல, தன் மீது குற்றம் சாட்டி இகழ்பவர்களின் செயல்களைப் பொறுப்பது ஒரு தலைமகனுக்கு அழகு தரும்!



மன்னர் புருஷோத்தமனுடைய மைத்துனன் மனோகரன் ஓர் அஞ்சா நெஞ்சன். தன் மனதில் தோன்றுவதை மறைக்காமல் எடுத்துரைப்பவன். மன்னர் சபையில் தனது அமைச்சர்களுடனும், உயர் அதிகாரிகளுடனும் கலந்துரையாடல் நிகழ்த்துகையில், மனோகரனும் அங்கு அமர்ந்து தனது கருத்துக்களை வெளியிடுவான். மன்னரின் கருத்துக்கு எதிரான கருத்துக்களைக் கூற மற்றவர்கள் தயங்கும் போது, மனோகரன் அது தவறெனத் தோன்றினால் அவரை எதிர்த்து பேச தயங்க மாட்டான்.



தனது சகோதரனின் போக்கு ராணிக்கு பிடிக்கவில்லை. பலமுறை அவள் மனோகரனைக் கண்டிக்கும் போது மன்னர் அவளைத் தடுத்து விடுவார். ஒருநாள் சபையில் புருஷோத்தமன் தனது அரசாட்சியில் இளைஞர்களின் வேலையில்லாத் திண்டாட்டத்தைப் பற்றி அமைச்சர்களுடன் விவாதித்தார். அப்போது, "வேலையற்ற இளைஞர்களுக்கு மாதம் 30 வராகன்கள் உதவித்தொகை அளிக்கலாம் என்று நினைக்கிறேன்" என்றார்.



அமைச்சர்கள் அதைக் கேட்டு "ஆகா, அற்புதமான யோசனை" என்று பாராட்டினார்கள். ஆனால் மனோகரன் மட்டும், " இது மதியற்ற செயல். உதவித்தொகை அளிப்பதால் அந்த இளைஞர்கள் சோம்பேறி ஆகிவிடுவார்கள். இதை விடுத்து, அவர்களுடைய நிரந்தர வருமானம் தரும் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்" என்று மன்னரின் கருத்துக்கு எதிர்மாறான கருத்தைக் கூறினான். அத்துடன் மன்னரின் மற்ற நலத் திட்டங்களையும் விமர்சனம் செய்தான்.



சபையில் நடந்ததைக் கேட்டு சினமுற்ற ராணி தன் சகோதரனைப் பார்த்து, "மன்னனை விமர்சிக்க உனக்கு என்ன தைரியம்? இந்த ராஜ்யத்தை விட்டு இப்போதே வெளியேறு" என சீறி விழுந்தாள்.



ஆனால் அவளைத் தடுத்த மன்னர், "அவனைக் கோபிக்காதே ராணி. அவன் மனதில் பட்டதைக் கூறுகிறான். தன் கருத்துப்படி தான் மற்றவர்கள் நடக்கவேண்டும் என்று மன்னன் நினைப்பது தவறு. புத்திசாலிகள் கூறும் ஆலோசனைகளை பரிசீலித்து மக்களுக்கான திட்டங்களை வகுக்க வேண்டும். மனோகரன் புத்திசாலி. பொறுமையாக அவன் கூறுவதைக் கேட்போம்" என்றார்.



அவர் பொறுமையிழக்காமல் மனோகரனின் நலத்திட்டங்களைக் கேட்டு, அதை அப்படியே நடைமுறைப்படுத்தினார். அது முதல் நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் முற்றிலும் ஒழிந்தது.

திருக்குறள்

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.

விளக்கம்:
எந்த ஒரு செயலையும் தொடங்குவதற்கு முன் யோசித்துத் திட்டமிட்டு செயல்பட வேண்டும். திட்டமிடாமல் செயல்படுவது பெரும் தவறு.
கிராமத்தில் தன் தாயுடன் எளிய வாழ்வு வாழ்ந்து கொண்டிருந்த இளைஞன் சுதாகருக்கு வளைகுடா நடுகளில் சென்று பணியாற்றி பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. கிராமத்தில் ஓரிரு நண்பர்கள் தந்த தகவலின் படி, பக்கத்து நகரத்தில் உள்ள நிறுவனன் ஒன்றில் வெளிநாடுகளுக்கு வேலைக்கு ஆள் சேர்க்கும் பணி நடைபெறுவதை அறிந்து, உடனே அந்த நிறுவனத்தினரை சென்று சந்தித்தான்.

வளைகுடா நாடுகளில் சிரமமின்றி சிறிது நேரமே வேலை செய்து விட்டு அதிகம் சம்பாதிக்கலாம் என்றும், விமானச் செலவு, விசா செலவு, நிறுவனத்துக்கு கமிஷன் என மொத்தமாக ஒரு தொகையை கட்டுவிட்டால் உடனே வெளிநாடு சென்றுவிடலாம் என்று அவர்கள் கூறியதைக் கேட்டு, பல கனவுகளுடன் சுதாகர் வீடு திரும்பினான்.

சுதாகர் கூறியவற்றைக் கேட்ட அவனது அம்மா, "முன் பின் தெரியாத அயல் நாட்டில் யோரோ ஒருவர் வேலை தருகிறேன் என்று சொன்னால் உடனே ஒப்புக்கொள்ளக் கூடாது. அந்த வேலை எப்படிப்பட்டது, உண்மையில் சம்பளம் எவ்வளவு, அந்த நிறுவனத்தை நம்பலாமா என்று எல்லாவற்றையும் தீர விசாரித்து விட்டு செயலில் இறங்கு" என அறிவுரை கூறினாள். ஆனால் சுதாகர் அதைக் கேட்கவில்லை. யாரிடமும் கலந்தாலோசிக்காமல் கடன் வாங்கி, பாத்திர பண்டங்களை விற்று அந்த நிறுவனத்துக்கு பணம் செலுத்தினான்.

சொன்னபடியே அவனை விமானத்தில் ஏற்றி விட்டனர். பல கனவுகளுடன் வலைகுடா நாட்டு விமான நிலையம் சென்றான். ஆனால் சுதாகரையும், அவனுடன் வேலைக்கு சென்ற மேலும் சிலரையும் பரிசோதித்த அதிகாரிகள், போலி விசாவில் அவர்கள் வந்திருப்பதாகக் கூறி கைது செய்தனர். விசாரணையின் முடிவில், உடனே அவர்களை தாய்நாடு திரும்பும் படி உத்தரவிட்டனர்.

ஆனால் கையில் பணம் இல்லாததால் மிகவும் சிரமப்பட்டு பல பேரிடம் உதவி பெற்று எப்படியோ நாடு திரும்பினான் சுதாகர். யாரையும் கலந்தாலோசிக்காமல் அவசரப்பட்டு எடுத்த முடிவால் பணம், மரியாதையை இழந்து, கடனை அடைக்க முடியாமல் கிராமத்தில் மிகுந்த சிரமத்துடன் வாழ்க்கையை ஓட்டினான்.

திருக்குறள்

கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை!



விளக்கம்: கல்வி ஒன்றே அழிவற்ற செல்வமாகும். அதற்கொப்பான சிறந்த செல்வம் வேறு எதுவுமில்லை.

கடலோரப் பகுதி கிராமமான நல்லூரில் வசித்து வந்த இரத்தினசாமி என்ற எளிய விவசாயிக்கு சொந்தமாக இருந்தது இரண்டு ஏக்கர் நிலம் மட்டுமே! அவருக்கு மாணிக்கம், முத்து என்ற இரு மகன்கள் இருந்தனர். இருவரும் பள்ளிப் படிப்பை முடித்தனர்.



ஒருநாள் இருவரையும் அழைத்து, “எனக்கிருப்பது ஒரு வீடும், இரு ஏக்கர் நலமுமே! நீங்கள் உங்கள் கல்வியை இத்துடன் முடித்துக் கொண்டு என்னைப்போல் விவசாயத்தில் ஈடுபடுகிறீர்களா?” என்று கேட்டார்.



கல்வியில் பெரிதும் நாட்டம் கொண்டிருந்த மாணிக்கம், “அப்பா! நான் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து படித்து, எனக்கு ஒரு வளமான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள விரும்புகிறேன்!” என்றான். இளையவன் முத்து, “எனக்கு படிப்பில் நாட்டமில்லை. விவசாயம் செய்யவும் விருப்பமில்லை. நான் வியாபாரம் செய்ய விரும்புகிறேன்!” என்றான்.

இருவருக்குமே, விவசாயத்தில் நாட்டம் இல்லாததால், இரத்தினசாமி தன் நிலத்தை விற்று, கிடைத்த தொகையை இருவருக்கும் சமமாகப் பங்கிட்டு அளித்தார். மாணிக்கம் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து செவ்வனே பயின்று தேறி, நல்லதொரு வேலையில் அமர்ந்தான். முத்து தனக்குக் கிடைத்த தொகையை வியாபாரத்தில் முதலீடு செய்து வியாபாரம் தொடங்கினான்.

ஆனால், சில ஆண்டுகளில் வியாபாரத்தில் பெருத்த நட்டம் ஏற்பட்டு முதலீடு செய்த தொகையை முற்றிலும் இழந்து நின்றான். மனமுடைந்து பரிதாபமாக நின்ற முத்துவை நோக்கி மாணிக்கம், “தம்பி! கல்வி ஒன்றே அழிவற்ற செல்வம். நான் பெற்றுள்ள கல்வி எனும் செல்வத்தினால்தான், எனக்கு நிரந்தர வருமானம் தரக்கூடிய வேலை கிடைத்தது. ஒருவன் பெற்றுள்ள கல்வி எனும் செல்வம் காலத்தால் அழியாதது. அதை யாரும் திருடிச் செல்ல முடியாது. அதை யாராலும் சேதமாக்கவும் முடியாது. ஆனால் பணம் அவ்வாறு அல்ல! பணம் எனும் செல்வம் நிலையற்றது.



உனக்குக் கிடைத்த தொகையில் என்னைப்போல் நீயும் உயர் கல்வி பயின்றிருக்கலாம்! ஆனால், நீ அதை வியாபாரத்தில் முதலீடாக வைத்து விட்டாய்! நீ செய்தது தவறு என்று கூறவில்லை. ஒருவேளை உன்னுடைய வியாபாரம் வெற்றிகரமாகவும் இயங்கலாம் என்று எண்ணியே நான் உன்னைத் தடுக்கவில்லை. ஆனால் வியாபாரத்தில் லாபம் ஈட்டவும் செய்யலாம்; நட்டமும் ஆகலாம்! கல்வி அவ்வாறு அல்ல! நடந்ததை நினைத்து வருந்தாதே! இப்போதும் நீ இளைஞன்தான்! கல்வி கற்க வயது ஒரு தடையில்லை. என்னைப்போல் நீயும் உயர்கல்வி பயில நான் உனக்கு உதவி செய்கிறேன். அதன்பிறகு, என்ன தொழில் செய்ய வேண்டும் என்பதை நீ முடிவு செய்வாய்!” என்றான்.



தன் சகோதரன் சொல்வதில் உள்ள நிதர்சனத்தை புரிந்து கொண்ட முத்து, உயர்படிப்புக்கு ஆயத்தமானான்.

ஆதியாகமம்

2 அதிகாரம்

1. இவ்விதமாக வானமும் பூமியும், அவைகளின் சர்வசேனையும் உண்டாக்கப்பட்டுத் தீர்ந்தன.

2. தேவன் தாம் செய்த தம்முடைய கிரியையை ஏழாம் நாளிலே நிறைவேற்றி, தாம் உண்டாக்கின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தார்.

3. தேவன் தாம் சிருஷ்டித்து உண்டுபண்ணின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு அதிலே ஓய்ந்திருந்தபடியால், தேவன் ஏழாம் நாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.

4. தேவனாகிய கர்த்தர் பூமியையும் வானத்தையும் உண்டாக்கின நாளிலே, வானமும் பூமியும் சிருஷ்டிக்கப்பட்ட வரலாறு இவைகளே.

5. நிலத்தினுடைய சகலவிதச் செடிகளும் பூமியின்மேல் இன்னும் உண்டாகவில்லை, நிலத்தினுடைய சகலவிதப் பூண்டுகளும் இன்னும் முளைக்கவில்லை; ஏனெனில் தேவனாகிய கர்த்தர் பூமியின்மேல் இன்னும் மழையைப் பெய்யப்பண்ணவில்லை; நிலத்தைப் பண்படுத்த மனுஷனும் இருந்ததில்லை.

6. அப்பொழுது மூடுபனி பூமியிலிருந்து எழும்பி, பூமியையெல்லாம் நனைத்தது.

7. தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்.

8. தேவனாகிய கர்த்தர் கிழக்கே ஏதேன் என்னும் ஒரு தோட்டத்தை உண்டாக்கி, தாம் உருவாக்கின மனுஷனை அதிலே வைத்தார்.

9. தேவனாகிய கர்த்தர், பார்வைக்கு அழகும் புசிப்புக்கு நலமுமான சகலவித விருட்சங்களையும், தோட்டத்தின் நடுவிலே ஜீவவிருட்சத்தையும், நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தையும் பூமியிலிருந்து முளைக்கப்பண்ணினார்.

10. தோட்டத்துக்குத் தண்ணீர் பாயும்படி ஏதேனிலிருந்து ஒரு நதி ஓடி, அங்கேயிருந்து பிரிந்து நாலு பெரிய ஆறுகளாயிற்று.

11. முதலாம் ஆற்றுக்குப் பைசோன் என்று பேர், அது ஆவிலா தேசம் முழுவதையும் சுற்றி ஓடும்; அவ்விடத்திலே பொன் விளையும்.

12. அந்தத் தேசத்தின் பொன் நல்லது; அவ்விடத்திலே பிதோலாகும், கோமேதகக் கல்லும் உண்டு.

13. இரண்டாம் ஆற்றுக்குக் கீகோன் என்று பேர், அது எத்தியோப்பியா தேசம் முழுவதையும் சுற்றி ஓடும்.

14. மூன்றாம் ஆற்றுக்கு இதெக்கேல் என்று பேர், அது அசீரியாவுக்குக் கிழக்கே ஓடும்; நாலாம் ஆற்றுக்கு ஐபிராத்து என்று பேர்.

15. தேவனாகிய கர்த்தர் மனுஷனை ஏதேன் தோட்டத்தில் அழைத்துக் கொண்டுவந்து, அதைப் பண்படுத்தவும் காக்கவும் வைத்தார்.

16. தேவனாகிய கர்த்தர் மனுஷனை நோக்கி: நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம்.

17. ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்.

18. பின்பு தேவனாகிய கர்த்தர்: மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார்.

19. தேவனாகிய கர்த்தர் வெளியின் சகலவித மிருகங்களையும், ஆகாயத்தின் சகலவிதப் பறவைகளையும் மண்ணினாலே உருவாக்கி, ஆதாம் அவைகளுக்கு என்ன பேரிடுவான் என்று பார்க்கும்படி அவைகளை அவனிடத்தில் கொண்டுவந்தார்; அந்தந்த ஜீவஜந்துக்கு ஆதாம் எந்தெந்தப் பேரிட்டானோ அதுவே அதற்குப் பேராயிற்று.

20. அப்படியே ஆதாம் சகலவித நாட்டுமிருகங்களுக்கும், ஆகாயத்துப் பறவைகளுக்கும், சகலவிதக் காட்டுமிருகங்களுக்கும் பேரிட்டான்; ஆதாமுக்கோ ஏற்ற துணை இன்னும் காணப்படவில்லை.

21. அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கு அயர்ந்த நித்திரையை வரப்பண்ணினார், அவன் நித்திரையடைந்தான்; அவர் அவன் விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து, அந்த இடத்தைச் சதையினால் அடைத்தார்.

22. தேவனாகிய கர்த்தர் தாம் மனுஷனில் எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி, அவளை மனுஷனிடத்தில் கொண்டு வந்தார்.

23. அப்பொழுது ஆதாம்: இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள்; இவள் மனுஷனில் எடுக்கப்பட்டபடியினால் மனுஷி என்னப்படுவாள் என்றான்.

24. இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்.

25. ஆதாமும் அவன் மனைவியுமாகிய இருவரும் நிர்வாணிகளாயிருந்தும், வெட்கப்படாதிருந்தார்கள்.

ஆதியாகமம்

1. ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.

2. பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்.

3. தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார், வெளிச்சம் உண்டாயிற்று.

4. வெளிச்சம் நல்லது என்று தேவன் கண்டார்; வெளிச்சத்தையும் இருளையும் தேவன் வெவ்வேறாகப் பிரித்தார்.

5. தேவன் வெளிச்சத்துக்குப் பகல் என்று பேரிட்டார், இருளுக்கு இரவு என்று பேரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி முதலாம் நாள் ஆயிற்று.

6. பின்பு தேவன்: ஜலத்தின் மத்தியில் ஆகாயவிரிவு உண்டாகக்கடவது என்றும், அது ஜலத்தினின்று ஜலத்தைப் பிரிக்கக்கடவது என்றும் சொன்னார்.

7. தேவன் ஆகாய விரிவை உண்டு பண்ணி, ஆகாயவிரிவுக்குக் கீழே இருக்கிற ஜலத்திற்கும் ஆகாயவிரிவுக்கு மேலே இருக்கிற ஜலத்திற்கும் பிரிவுண்டாக்கினார்; அது அப்படியே ஆயிற்று.

8. தேவன் ஆகாயவிரிவுக்கு வானம் என்று பேரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி இரண்டாம் நாள் ஆயிற்று.

9. பின்பு தேவன்: வானத்தின் கீழே இருக்கிற ஜலம் ஓரிடத்தில் சேரவும், வெட்டாந்தரை காணப்படவும் கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.

10. தேவன் வெட்டாந்தரைக்குப் பூமி என்றும், சேர்ந்த ஜலத்திற்குச் சமுத்திரம் என்றும் பேரிட்டார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.

11. அப்பொழுது தேவன்: பூமியானது புல்லையும், விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும், பூமியின்மேல் தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைத் தங்கள் தங்கள் ஜாதியின்படியே கொடுக்கும் கனிவிருட்சங்களையும் முளைப்பிக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.

12. பூமியானது புல்லையும், தங்கள் தங்கள் ஜாதியின்படியே விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும் தங்கள் தங்கள் ஜாதியின்படியே தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைக் கொடுக்கும் விருட்சங்களையும் முளைப்பித்தது; தேவன் அது நல்லது என்று கண்டார்.

13. சாயங்காலமும் விடியற்காலமுமாகி மூன்றாம் நாள் ஆயிற்று.

14. பின்பு தேவன்: பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் உண்டாகத்தக்கதாக வானம் என்கிற ஆகாய விரிவிலே சுடர்கள் உண்டாகக்கடவது, அவைகள் அடையாளங்களுக்காகவும் காலங்களையும் நாட்களையும் வருஷங்களையும் குறிக்கிறதற்காகவும் இருக்கக்கடவது என்றார்.

15. அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கும்படிக்கு வானம் என்கிற ஆகாய விரிவிலே சுடர்களாயிருக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.

16. தேவன், பகலை ஆளப் பெரிய சுடரும், இரவை ஆளச் சிறிய சுடரும் ஆகிய இரண்டு மகத்தான சுடர்களையும், நட்சத்திரங்களையும் உண்டாக்கினார்.

17. அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கவும்,

18. பகலையும் இரவையும் ஆளவும், வெளிச்சத்துக்கும் இருளுக்கும் வித்தியாசம் உண்டாக்கவும், தேவன் அவைகளை வானம் என்கிற ஆகாய விரிவிலே வைத்தார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.

19. சாயங்காலமும் விடியற்காலமுமாகி நாலாம் நாள் ஆயிற்று.

20. பின்பு தேவன்: நீந்தும் ஜீவஜந்துக்களையும், பூமியின்மேல் வானம் என்கிற ஆகாயவிரிவிலே பறக்கும் பறவைகளையும், ஜலமானது திரளாய் ஜநிப்பிக்கக்கடவது என்றார்.

21. தேவன், மகா மச்சங்களையும், ஜலத்தில் தங்கள் தங்கள் ஜாதியின்படியே திரளாய் ஜநிப்பிக்கப்பட்ட சகலவித நீர் வாழும் ஜந்துக்களையும், சிறகுள்ள ஜாதி ஜாதியான சகலவிதப்பட்சிகளையும் சிருஷ்டித்தார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.

22. தேவன் அவைகளை ஆசீர்வதித்து, நீங்கள் பலுகிப் பெருகி, சமுத்திர ஜலத்தை நிரப்புங்கள் என்றும், பறவைகள் பூமியில் பெருகக்கடவது என்றும் சொன்னார்.

23. சாயங்காலமும் விடியற்காலமுமாகி ஐந்தாம் நாள் ஆயிற்று.

24. பின்பு தேவன்: பூமியானது ஜாதிஜாதியான ஜீவஜந்துக்களாகிய நாட்டு மிருகங்களையும், ஊரும் பிராணிகளையும், காட்டு மிருகங்களையும் ஜாதிஜாதியாகப் பிறப்பிக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.

25. தேவன் பூமியிலுள்ள ஜாதிஜாதியான காட்டு மிருகங்களையும் ஜாதிஜாதியான நாட்டு மிருகங்களையும், பூமியில் ஊரும் பிராணிகள் எல்லாவற்றையும் உண்டாக்கினார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.

26. பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக; அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார்.

27. தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார்; அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்.

28. பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப்பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்.

29. பின்னும் தேவன்: இதோ, பூமியின்மேல் எங்கும் விதைதரும் சகலவிதப் பூண்டுகளையும், விதைதரும் கனிமரங்களாகிய சகலவித விருட்சங்களையும் உங்களுக்குக் கொடுத்தேன், அவைகள் உங்களுக்கு ஆகாரமாயிருக்கக்கடவது;

30. பூமியிலுள்ள சகல மிருகஜீவன்களுக்கும், ஆகாயத்திலுள்ள சகல பறவைகளுக்கும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் எல்லாவற்றிற்கும் பசுமையான சகல பூண்டுகளையும் ஆகாரமாகக் கொடுத்தேன் என்றார்; அது அப்படியே ஆயிற்று.

31. அப்பொழுது தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்தார், அது மிகவும் நன்றாயிருந்தது; சாயங்காலமும் விடியற்காலமுமாகி ஆறாம் நாள் ஆயிற்று.

Friday, April 2, 2010

A - வரிசை

A-ARM - கவைக்கரம் - சீருந்து சக்கரத்துடன் பிணைக்கும் கவை வடிவ தொங்கல் அமைப்பு

ACCELERATOR - முடுக்கி

AIR-FLOW COOLING SYSTEM - காற்றுக் குளிரலமைப்பு

AIR-FUEL MIXTURE - காற்றெரிபொருள் கலவை

AIR BREAK - காற்று நிறுத்தி

AIR FILTER - காற்று வடிப்பி

AIR INTAKE SYSTEM - காற்றிழுவமைப்பு - ஒரு காற்றுக்கலக்கி விசைப்பொறியில் (carburettor engine) வெளிக்காற்று காற்று வடிப்பி (air-filter) மூலம் காற்றுக்கலக்கிக்குள் (carburettor) நுழையும்; பின்பு அது உள்ளிழு பன்மடிமம் (intake manifold) மூலமாக கலன்களுக்குள் (cylinders) நுழையும்; உட்செலுத்தல் விசைப்பொறியில் (fuel injection engine) காற்று காற்றிழுவி எனப்படும் நீண்ட தூம்பு மூலமாக காற்று வடிப்பிக்குள் நுழைகிறது. பின்பு காற்றுப்பாய்வளவி (air-flow meter) மூலமாக நெரிப்பறைக்குள் (throttle chamber) சென்று, அதன் பின்னர் விசைப்பொறிக்குள் நுழைகிறது.

AIR PUMP - காற்றிறைப்பி

ALL WHEEL DRIVE - அனைத்தியக்க, அனைத்தியக்கூர்தி -

ALTERNATOR - மாறுமின்னாக்கி

ANTI-FREEZE - உறைத்தடுப்பி - குளிர்பொருள் கடும்பனிக்காலத்தில் உறையாமல் இருக்க, அதன் உறைநிலை குறைக்க வைக்கும் சேர்ப்பொருள்

ANTI-LOCK BRAKING SYSTEM (A.B.S.) - வழுக்கா நிறுத்தி (நிறுத்தமைப்பு) - சக்கரம் பூட்டிய நிலையை உணர்ந்து தன்னியக்கமாக விடுவிக்கும் நிறுத்தமைப்பு; இதனால் வழுக்கம் ஏற்படாமல் இருக்கும்

ASSEMBLY-LINE - ஒன்றுகூட்டு வரிசை

AUTOMATIC TRANSMISSION - தன்னியக்கப் பரப்புகை

AUTOMOBILE - தானுந்து

AXLE - அச்சாணி



B - வரிசை

BALL JOINT - பந்துமூட்டு - உந்துவண்டியின் முன்சக்கரங்களை தொங்கலில் (suspension) தாங்கும் கட்டகம்

BELT DRIVE - வாரியக்கி - பற்சக்கரப்பெட்டியிலிருந்து சக்கரங்களை இயக்க கப்பி மற்றும் தோல் அல்லது மீள்ம வார் கொண்ட கட்டகம்

BRAKE - நிறுத்தி

BRAKE DRUM - தேயுருளையம் - வாகனத்தை நிறுத்துவதற்கு நிறுத்துக்கட்டையுடன் உராயும் உருள்வடிவ பரப்பு; உருளைய நிறுத்தமைப்பில் பயனாகிறது; நிறுத்துவதற்காக ஏற்படும் உராய்வு உட்பரப்பில் அமையும்

BRAKE SHOE - நிறுத்துக்கட்டை

BUMPER - அடிதாங்கி



C - வரிசை

CARBURETTOR - காற்றுக்கலக்கி - எரியறைக்குள் உள்ளிழு வெற்றிடத்தால் (intake vacuum) எரிபொருள் உட்செலுத்தப்படும் அமைப்பு

CATALYTIC CONVERTER - வினையூக்க மாசகற்றி - வெளியேறி நச்சு வளிகளை குறைக்கச்செய்யும் சாதனம்

CENTRIFUGE - மையவிலக்கி -

CHASSIS - அடிச்சட்டம்

CLUTCH - விடுபற்றி

COMBUSION CHAMBER - எரியறை

CONNECTING ROD - இணைப்புக் கம்பி - ஆடுதண்டையும் (piston) வளைவச்சையும் (crank) இணைக்கும் கம்பி

COOLANT - குளிர்வி

COOLING SYSTEM - குளிரலமைப்பு

COUPE - பதுங்கறை சீருந்து

COWL - முகப்புத்தாங்கி

CRANK - வளைவச்சு

CRUISE CONTROL - சீர்வேகக்கருவி

CYLINDER - கலன்

CYLINDER BLOCK - கலன்கூறு - விசைப்பொறி மற்றும் கலன்களை கொண்ட கட்டகம்

CYLINDER HEAD - கலன்தலை - தீப்பொறியை மற்றும் ஓரதர்களை (valves) கொண்ட விசைப்பொறியின் பிரிக்கத்தகு பகுதி



D - வரிசை

DAMPER - அதிர்வுதாங்கி

DASHBOARD - முகப்புப்பெட்டி

DELIVERY PIPE - வழங்கு புழம்பு - எரிபொருளை விசைப்பொறியின் உள்ளிழு ஓரதருக்கு (intake valve) கொண்டுவரும் புழம்பு

DISK BRAKE - வட்டு நிறுத்தி - இந்த நிறுத்தமைப்பில் ஒவ்வொரு சக்கரத்திலும் ஒரு நழுவிடுக்கி (caliper) தேய்ப்பஞ்சை (break pad) சுற்றகத்தின் மீது அமுக்கும்

DOUBLE-WISHBONE SUSPENSION - இரட்டைக் கவைக்கவத் தொங்கல் சீருந்து சக்கரத்துடன் பிணைக்கும் மேல் மற்றும் கீழ்க் கவைக்கர தொங்கல் அமைப்பு

DRUM BRAKE - உருளைய நிறுத்தி - இந்த நிறுத்தமைப்பில் ஒரு நீரியக்க (hydraulic) உருளையம் (drum) இருந்து நிறுத்துக்கட்டைகளை தேயுருளையின் (break-drum) உட்பரப்பு மீது அமுக்கும்



E - வரிசை

ELECTRONIC FUEL INJECTION (EFI) SYSTEM - மின்னணு (எரிபொருள்) உட்செலுத்தமைப்பு - இதன் உறுப்புகள் அ)எரிபொருள் வழங்கமைப்பு (fuel delivery system); ஆ)காற்றிழுவமைப்பு (air intake system); இ)மின்னணு கட்டுப்பாடமைப்பு (electronic control system)

ENGINE - விசைப்பொறி

EXHAUST (GAS) - வெளியேறி

EXHAUST (SYSTEM) - வெளியேற்றகம்

EXHAUST MANIFOLD - வெளியேற்று பன்மடிமம்



F - வரிசை

FLYWHEEL - உந்துசக்கரம்

FRONT WHEEL DRIVE - முன்னியக்க, முன்னியக்கூர்தி -

FUEL CELL - எரிபொருள் கலன்

FUEL INJECTION SYSTEM - உட்செலுத்தமைப்பு - எரிபொருளை அழுத்தத்தில் விசைப்பொறியின் எரியறைக்குள் உட்செலுத்தும் அமைப்பு



G - வரிசை

GOVERNOR - ஆள்கருவி - இரு வாகனத்தின் விசைப்பொறியின் வேகத்தை அளக்கும் கருவி; இது பந்துகள் மட்டு சுழல்வில் சுமந்த கரங்கள் கொண்டது; மைவிலக்கு விசையால் இயங்குகிறது -

GYRATOR - கொட்பி



H - வரிசை


HATCHBACK - பொதுவறை சீருந்து



I - வரிசை

IDLE - நிலையிக்கம்

IDLE SPEED - நிலையியக்க வேகம்

IGNITION - தீமூட்டல்

IGNITION CIRCUIT - தீமூட்டுச்சுற்று - இரண்டு துணைச்சுற்றுக்கள் கொண்டது; முதன்மையது தீமூட்டுச்சாவியால் கட்டுப்படுத்தப்படுகிறது. 12V மின்னழுத்தம் மின்கலத்திலிருந்து மாறுமின்னாக்கி (alternator) மூலமாக வழங்குகிறது. அஞ்சல் மூடப்படும்போது மின்னோட்டம் அடிச்சட்டத்தில் பாய்கிறது. அஞ்சல் திறக்கும்போது, மின்னோட்டப் பாய்வு நிற்கும். இது துணைச்சுருணையில் உயரழுத்தத்தை தூண்டி வில்லிறக்கத்தால் தீமூட்டுகிறது. வாகனம் துவங்கின பிறகு மின்னழுத்த சீர்மி (voltage regulator) மின்கலம் மாறுமின்னாக்கியிலிருந்து மிகையூட்டப்படாமல் பாதுகாக்கிறது.

IGNITION SWITCH - தீமூட்டுத் திறப்பான் - ஐந்துநிலை திறப்பான். START நிலையில் தொடுநிலை (contact) ஏற்படுத்தி, சாவி RUN நிலையில் விடுவிக்கப்படுகிறது. மற்ற நிலைகள் ACCESSORIES, RUN மற்றும் OFF.

INDEPENDENT REAR SUSPENSION - தனிப்பட்ட பின்புறத் தொங்கல் - ஒவ்வொரு சக்கரமும் தினித்தியங்கும் பின்புறத் தொங்கல் அமைப்பு; இதன் மூலம் வாகனத்தில் ஒடுக்கம் மற்றும் முடுக்கத்தில் ஏற்படும் முன் மற்றும் பின் குனிவை குறைத்து பிடிப்பை மேம்படுத்துகிறது

INDICATOR - காட்டொளி

INLINE ENGINE - கலன்கள் - (cylinders) நேர்வரிசையாக உள்ள விசைப்பொறி; straight4 என்ற குறியீடு 4-கலன் நேர்வரிசை உள்ளமைவைக் குறிக்கும்; straight6 6-கலன் நேர்வரிசையைக் குறிக்கும்.

INTAKE MANIFOLD - உள்ளிழு பன்மடியம் - காற்றுக்கலக்கிக்கும் (carburettor) உள்ளிழு ஓரதர்களுக்கும் (intake valve) இடையமைந்த குழல்கள். காற்று-எரிபொருள் கலவை நெரிப்பி (throttle) வழியாக பாய்கிறது. இதில் ஒரு உள்ளீடு வாய், கலன்களின் எண்ணிக்கைக்கு தகுந்த பல வெளியீடு வாய்கள் கொண்டது.



J - வரிசை

JOINT - மூட்டு

L - வரிசை

LIMOUSINE - உல்லாசவுந்து



M - வரிசை

MANUAL TRANSMISSION - ஆளியக்கப் பரப்புகை

MACPHERSON STRUT - மிதவையதிர்வுதாங்கு உதைசட்டம் - நேரச்சு அதிர்வுதாங்கி கொண்டுள்ள தொங்கல் அமைப்பு; படம்

MECHANICAL STEERING - பொறிமுறைத் திருப்பி

MULTIPOINT FUEL INJECTION (M.P.F.I.) - பன்முனை உட்செலுத்தல் - இந்தச் உட்செலுத்தலில் ஒவ்வொரு கலனிலும் பல உட்செலுத்திகள் (injectors) அமைந்துள்ளன; இதனால் காற்றெரிபொருள் கலவை (air-fuel mixture) சமமாக இருக்கும்; முடுக்கம் மற்றும் ஒடுக்கம் விரையும்; எரிபொருள் சிக்கனம் கூடும்



N - வரிசை

NATURALLY ASPIRATED ENGINE - இயலிழுப்பு விசைப்பொறி - சுழலூட்டு (turbo-charged) அல்லது மிகையூட்டு (super-charged) அல்லாத விசைப்பொறி

NOZZLE - நுனிக்குழல் - எரிபொருளை அணுவாக்கவும் கலனுக்குள் வழங்கச் செய்யும் கட்டகம்

NOZZLE BODY - நுனிக்குழலகம் - எரிபொருளை ஓரதருக்கு (valve) வழிகாட்டும் நுனிக்குழலின் பகுதி; இங்கு தெளிப்பியின் துளைகள் (spray openings) அமைந்துள்ளன





O - வரிசை

OVERFLOW CHANNEL - வழிவு வாய்க்கால்



P - வரிசை

PAYLOAD - தாங்குசுமை

PISTON - ஆடுதண்டு

PITMAN ARM - பிடிமுனைக்கரம்

POWER STEERING - விசைத்திருப்பி - நீரியக்க (hydraulic) மற்றும் மின்னியக்க திருப்பான் அமைப்பு; இது திரும்பும் சிரமம் குறைவாக உள்ளது

PRESSURE VALVE - அழுத்தவோரதர்



R - வரிசை

RACK AND PINION STEERING - இத்திருப்பி அமைப்பில், பற்சிலி (rack) சக்கரங்களை இணைக்கும் அச்சாணியில் பொறிக்கப்பட்டுள்ளன. பல்லோடி திருப்பித்தண்டில் (steering shaft) அமைந்துள்ளது. பல்லோடியும்பற்சிலியும் சக்கரத்திருப்பி அமைப்பு திருப்பியக்கத்தை சக்கர அச்சாணியின் நேரியல் இயக்கமாக மாற்றுகிறது; படம்

RADIATOR - கதிர்வீசி

REAR WHEEL DRIVE - பின்னியக்க, பின்னியக்கூர்தி -

RECIRCULATING BALL STEERING - மறுசுழல்பந்து திருப்பி - இந்த திருப்பி அமைப்பில் ஒரு பிடிமுனைக்கரம் மூலம் சக்கரத்தின் அச்சாணியுடன் பிணைக்கப்படுகிறது; பிடிமுனைக்கரம் ஒரு ஆரைச்சிறைப் பற்சக்கரம் மற்றும் புழு பற்றகரம் மூலம் திருப்பித்தண்டுடன் (steering shaft) பிணைக்கிறது. படம்



S - வரிசை


SEDAN - சரக்கறை சீருந்து

SHOCK ABSORBER - அதிர்வேற்பி

SPARK PLUG - தீப்பொறிச்செருகி

SPEED GOVERNOR - வேகக்கட்டுப்பாட்டுக்கருவி

STEERING - சக்கரத்திருப்பி

STEERING ROD - திருப்பிக் கரம்

STEERING SHAFT - திருப்பித் தண்டு

STRUT - உதைசட்டம்

SUCTION TUBE - உறிஞ்சு தூம்பு

SUPERCHARGED ENGINE - மிகையூட்டு விசைப்பொறி - வாரியக்கியில் (belt-drive) அமைந்த காற்றமுக்கி (air-compressor) மூலம் காற்று கலனுக்குள் (cylinder) அழுத்தத்துடன் இறைக்கப்படும் விசைப்பொறி

SUPERCHARGER - மிகையூட்டி

SUSPENSION - தொங்கல்



T - வரிசை

THROTTLE - நெரிப்பி

THROTTLE-BODY - நெரிப்பகம்

THROTTLE-BODY FUEL INJECTION (TBI) - நெரிப்பகச் உட்செலுத்தல் - ஒரு நெரிப்பகம் (throttle-body) மீது எரிபொருள் உட்செலுத்தப்படும் அமைப்பு; இதன் செல்யபாடு காற்றுக்கலக்கிக்கு (carburettor) நிகரானது, ஆனால் உட்செலுத்தல் (fuel injection) இதற்கு புறமாக அமைந்துள்ளது

THROTTLE CHAMBER - நெரிப்பறை - உட்செலுத்தல் விசைப்பொறியில் (fuel injection engine) இது காற்றுப்பாய்வை (air-flow) கட்டுப்படுத்தும். இது மூடிய நிலையில் சீருந்து நிலையியங்கும் (idling); இதில் உள்ள மாற்றுவழியறை (bypass chamber) சிறிதளவு காற்றை விசைப்பொறிக்குள் விடுவிக்கிறது. மாற்றுவழியறைக்குள் காற்றுப்பாய்வை கட்டுப்படுத்தி விசைப்பொறியின் நிலையிருப்பு வேகத்தை மாற்றலாம்

THROTTLE PLATE - நெரிதகடு - நெரிப்பகத்தின் பெருமமான உறுப்பு; ஓட்டுநர் முடுக்கியை (accerator) அமுக்கினால், இந்தத் தகடு திறந்து காற்று விசைப்பொறிக்குள் நுழைய விடும்; சீர்வேகத்தின் (cruising speed) போது, இது நடுநிலையிலும், நிலையியக்கத்தின் (idling) போது இது முழுமையாக மூடியிருக்கும்

THROTTLE POSITION SENSOR (TPS) - நெரிநிலையுணரி - இந்த உணரி நெரிதகடில் (throttle plate) அமைந்திருக்கும்; இது மின்னணு உட்செலுத்தல் கணினியிடம் (EFI computer) நெரிதகடின் திறப்பு நிலையை தெரிவிக்கும்

TURBOCHARGED ENGINE - சுழலூட்டு விசைப்பொறி - வெளியேற்றகத்தில் அமைந்த சுழலி மூலம் காற்று கலனுக்குள் அழுத்தத்துடன் இறைக்கப்படும் விசைப்பொறி

TURBOCHARGER - சுழலூட்டி



W - வரிசை

WORM GEAR - புழு பற்சக்கரம்


Y - வரிசை

YOLK - நுகம்