Tamil FM

Tamil FM

Thirukural

1 அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு

2 கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின்

3 மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்

நிலமிசை நீடுவாழ் வார்

4 வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு

யாண்டும் இடும்பை இல

5 இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்

பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு

6 பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க

நெறிநின்றார் நீடுவாழ் வார்

7 தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்

மனக்கவலை மாற்றல் அரிது

8 அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்

பிறவாழி நீந்தல் அரிது

9 கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்

தாளை வணங்காத் தலை

10 பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

இறைவன் அடிசேரா தார்

11

வான்சிறப்பு

வான்நின்று உலகம் வழங்கி வருதலால்

தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று

12

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்

துப்பாய தூஉம் மழை

13

விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து

உள்நின்று உடற்றும் பசி

14

ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்

வாரி வளங்குன்றிக் கால்

15

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே

எடுப்பதூஉம் எல்லாம் மழை

16

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே

பசும்புல் தலைகாண்பு அரிது

17

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி

தான்நல்கா தாகி விடின்

18

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்

வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு

19

தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்

வானம் வழங்கா தெனின்

20

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்

வான்இன்று அமையாது ஒழுக்கு

21

நீத்தார் பெருமை

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து

வேண்டும் பனுவல் துணிவு

22

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து

இறந்தாரை எண்ணிக்கொண் டற்று

23

இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்

பெருமை பிறங்கிற்று உலகு

24

உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்

வரனென்னும் வைப்பிற்கோர் வித்து

25

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்

இந்திரனே சாலுங் கரி

26

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்

செயற்கரிய செய்கலா தார்

27

சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்

வகைதெரிவான் கட்டே உலகு

28

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து

மறைமொழி காட்டி விடும்

29

குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி

கணமேயும் காத்தல் அரிது

30

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர் க்கும்

செந்தண்மை பூண்டொழுக லான்

31

அறன்வலியுறுத்தல்

சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு

ஆக்கம் எவனோ உயிர்க்கு

32

அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை

மறத்தலின் ஊங்கில்லை கேடு

33

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே

செல்லும்வாய் எல்லாஞ் செயல்

34

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்

ஆகுல நீர பிற

35

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்

இழுக்கா இயன்றது அறம்

36

அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது

பொன்றுங்கால் பொன்றாத் துணை

37

அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை

பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை

38

வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்

வாழ்நாள் வழியடைக்கும் கல்

39

அறத்தான் வருவதே இன்பம் மற் றெல்லாம்

புறத்த புகழும் இல

40

செயற்பால தோரும் அறனே ஒருவற்கு

உயற்பால தோரும் பழி

41

இல்லறவியல்

இல்வாழ்க்கை

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்

நல்லாற்றின் நின்ற துணை

42

துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும்

இல்வாழ்வான் என்பான் துணை

43

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு

ஐம்புலத்தாறு ஓம்பல் தலை

44

பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை

வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்

45

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது

46

அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்

போஒய்ப் பெறுவ தெவன்?

47

இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்

முயல்வாருள் எல்லாம் தலை

48

ஆற்றின் ஒழுக் கி அறனிழுக்கா இல்வாழ் க்கை

நோற்பாரின் நோன்மை உடைத்து

49

அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்

பிறன்பழிப்ப தில்லாயின் நன்று

50

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உநற்யும்

தெய்வத்துள் வைக்கப் படும்

Thursday, November 25, 2010

மனித எலும்புகள் பட்டியல்

உடற்கூறியல் - என்புக்கூட்டுத்தொகுதி (Skeletal System)

ஒரு சாதாரண வளர்ந்த மனிதனுடைய எலும்புக்கூடு பின்வரும் 206 (மார்பெலும்பு மூன்று பகுதிகளாகக் கருதப்பட்டால் 208) எண்ணிக்கையான எலும்புகளைக் கொண்டிருக்கும். இந்த எண்ணிக்கை உடற்கூட்டியல் வேறுபாடுகளைப் பொறுத்து மாறுபடக்கூடும். எடுத்துக்காட்டாக, மிகக் குறைந்த எண்ணிக்கையான மனிதர்களில், ஒரு மேலதிக விலா எலும்பு (கழுத்துவில்) அல்லது ஒரு மேலதிகமான கீழ் முதுகெலும்பு காணப்படுவதுண்டு; இணைந்த சில எலும்புகளைத் தனி எலும்பாகக் கருதாவிடின், ஐந்து இணைந்த திருவெலும்பு; மூன்று (3 - 5) குயிலலகு எலும்புகள் சேர்ந்து 26 எண்ணிக்கையிலான முதுகெலும்புகள் 33 ஆகக் கருதப்படலாம். மனித மண்டையோட்டில் 22 எலும்புகள் (காதுச் சிற்றென்புகளைத் தவிர) உள்ளன; இவை எட்டு மண்டையறை (cranium) எலும்புகளாகவும் 14 முக எலும்புகளாகவும் (facial bones) பிரிக்கப்பட்டுள்ளன.




மனித எலும்புக்கூடு


மண்டையறை எலும்புகள் (8)

* 1 நுதலெலும்பு (frontal bone)
* 2 சுவரெலும்பு (parietal bone) (2)
* 3 கடைநுதலெலும்பு (temporal bone) (2)
* 4 பிடர் எலும்பு (occipital bone)
* ஆப்புரு எலும்பு (sphenoid bone)
* நெய்யரியெலும்பு (ethmoid bone)

முக எலும்புகள் (14)

* 7 கீழ்த்தாடை எலும்பு (mandible)
* 6 மேற்றாடை எலும்பு (maxilla) (2)
* அண்ணவெலும்பு (palatine bone) (2)
* 5 கன்ன எலும்பு (zygomatic bone) (2)
* 9 நாசி எலும்பு (nasal bone) (2)
* கண்ணீர் எலும்பு (lacrimal bone) (2)
* மூக்குச் சுவர் எலும்பு (vomer)
* கீழ் மூக்குத் தடுப்பெலும்பு (inferior nasal conchae) (2)

நடுக்காதுகளில் (6):

* சம்மட்டியுரு (malleus)
* பட்டையுரு (incus)
* ஏந்தியுரு (stapes)

தொண்டையில் (1):

* தொண்டை எலும்பு (நாவடி எலும்பு) (hyoid)

தோள் பட்டையில் (4):

* 25. காறை எலும்பு (clavicle)
* 29. தோள் எலும்பு (scapula)

மார்புக்கூட்டில் thorax(25):

* 10. மார்பெலும்பு (sternum) (1)
* மேலும் மூன்று என்புகளாகக் கருதப்படலாம்: பிடியுரு (manubrium), உடல் மார்பெலும்பு (body of sternum), வாள்வடிவ நீட்டம் (xiphoid process)

* 28. விலா எலும்புகள் (rib) (24)

முதுகெலும்புத் தூண் (vertebral column) (33):

* 8. கழுத்து முள்ளெலும்புகள் (cervical vertebra) (7)
* மார்பு முள்ளெலும்புகள் (thoracic vertebra) (12)
* 14. நாரிமுள்ளெலும்புகள் (lumbar vertebra) (5)
* 16. திரிகம் (திருவெலும்பு) (sacrum)
* வால் எலும்பு (குயிலலகு) (coccyx)

மேற்கைகளில் (arm) (1):

* 11. புய எலும்பு (மேல்கை எலும்பு) (humerus)
o 26. புய எலும்புப் புடைப்பு (மேல்கை எலும்புப் புடைப்பு) (condyles of humerus)

முன்கைகளில் (forearm) (4):

* 12. அரந்தி (ulna) (2)
* 13. ஆரை எலும்பு (radius) (2)
o 27. ஆரை எலும்புத் தலை (head of radius)

கைகளில் (hand) (54):

* மணிக்கட்டுகள் (carpal):
o படகெலும்பு (scaphoid) (2)
o பிறைக்குழி எலும்பு (lunate) (2)
o முப்பட்டை எலும்புtriquetrum) (2)
o பட்டாணி எலும்பு (pisiform) (2)
o சரிவக எலும்பு (trapezium) (2)
o நாற்புறவுரு எலும்பு (trapezoid) (2)
o தலையுரு எலும்பு (capitate) (2)
o கொக்கி எலும்பு (hamate) (2)

* அங்கை முன்னெலும்புகள் (அனுமணிக்கட்டு எலும்புகள்) (metacarpal): (5 × 2)

* விரலெலும்புகள் (phalange):

*
o அண்மை விரலெலும்புகள் (proximal phalanges) (5 × 2)
o நடு விரலெலும்புகள் (Intermediate phalanges) (4 × 2)
o தொலை விரலெலும்புகள் (distal phalanges) (5 × 2)

இடுப்புக்கூடு (pelvis) (2):

* 15. இடுப்பெலும்பு (ilium) மற்றும் கீழ் இடுப்பெலும்பு (ischium)


கால்கள் (leg) (8):

* 18. தொடையெலும்பு (femur) (2)
o 17. இடுப்பு மூட்டு (hip joint) (மூட்டு, எலும்பல்ல)
o 22. பெரிய தொடையெலும்புக் கொண்டை (greater trochanter of femur)
o 23. தொடையெலும்புப் புடைப்பு (condyles of femur)
* 19. சில்லெலும்பு (patella) (2)
* 20. கால் முன்னெலும்பு (கணைக்காலலுள்ளெலும்பு) (tibia) (2)
* 21. சிம்பு எலும்பு (கணைக்கால்வெளியெலும்பு) (fibula) (2)

காலடிகளில் (52):

* கணுக்காலெலும்புகள் (tarsal):
o குதிகால் (calcaneus) (2)
o முட்டி (talus) (2)
o படகுரு எலும்பு (navicular bone) (2)
o உள் ஆப்புவடிவ எலும்பு (2)
o இடை ஆப்புவடிவ எலும்பு (2)
o வெளி ஆப்புவடிவ எலும்பு (2)
o கனசதுர எலும்பு (cuboidal bone) (2)

* அனுகணுக்காலெலும்புகள் (metatarsal) (5 × 2)

* விரலெலும்புகள் (phalange):
o அண்மை விரலெலும்புகள் (proximal phalanges) (5 × 2)
o நடு விரலெலும்புகள் (intermediate phalanges) (4 × 2)
o தொலை விரலெலும்புகள் (distal phalanges) (5 × 2)

Tuesday, November 23, 2010

Abbreviation










GDC
:

Government Data Centre



AEO
:

Assistant Elementary Officer



AEEO
:

Assistant Elementary Educational Officer


A.P
:


Assistant Programmer


A.D
:

Assistant Director



D.G.E
:

Directorate of Government Examination


NIC

:

National Informatics Center


CEO
:

Chief Education Officer



HSE
:

Higher Secondary Examination



DEEO
:

District Elementary Educational Officer


AO
:


Administrative Officer

ஆய்தம்

ஆய்தம்


தமிழ் எழுத்துக்களில் உயிர், மெய் என்ற இரண்டிலும் அடங்காதது ஆய்தம் (குற்றியலுகரமும், குற்றியலிகரமும் உயிர் ஒலிகளே). வடிவத்தாலும் ஏனைய எழுத்துகளைப் போல் கோட்டு வடிவம் இன்றிப் புள்ளி வடிவம் பெற்றிருப்பது ஆய்தம். அதனால்தான் இதனைத் ‘தனிநிலை’ என்றழைப்பர் பின்னால் வந்த இலக்கண நூலார் (நன்னூல்). ஆய்த எழுத்துக் குறித்துப் பல்வேறுபட்ட ஆய்வுகள் நிகழ்ந்துள்ளன. ஆய்த எழுத்தைத் தொல்காப்பியர் ஒரு சார்பெழுத்தாகக் கருதுகிறார் என்பதைச் சென்ற பாடத்தில் பார்த்தோம். ஆய்தம் மொழியில் பயிலும் முறையை விளக்கும் தொல்காப்பியர் அது தனிமொழியிலும் புணர்மொழியிலும் வருவதை விளக்குகிறார்.


தனிமொழி ஆய்தம்


ஒரு குற்றெழுத்தின் முன்னர், உயிரோடு சேர்ந்த வல்லெழுத்து ஆறன் மேலும் ஆய்தம் வரும். அதாவது குறில் எழுத்தை அடுத்தும் வல்லின உயிர்மெய்க்கு முன்பும் ஆய்தம் வரும். இந்த வல்லின உயிர்மெய் பெரும்பாலும் குற்றியலுகரமாகவே அமையும்; சிறுபான்மை வேறு வல்லின உயிர்மெய்யாகவும் வரும்.


(எ-டு)


எஃகு, அஃது,
கஃசு
பஃறி எ, அ, க, ப
கு, து, சு
றி - குறில்கள்
- குற்றியலுகரங்கள்
- வேறு உயிர்மெய்


நூற்பா


குறியதன் முன்னர் ஆய்தப் புள்ளி
உயிரொடு புணர்ந்த வல்லாறன் மிசைத்தே.

(தொல். எழுத்து. மொழி. 5)


‘ஆய்தப் புள்ளி’ என்பதனால் அதனை மெய்போலக் கொள்ள வேண்டும் என்கிறார் இளம்பூரணர்.


புணர்மொழி ஆய்தம்


இரு சொற்களின் புணர்ச்சியில் ஆய்தம் வருவதுண்டு.


(எ-டு)


அல் + திணை
பல் + தொடை
கல் + தீது
முள் + தீது

>
>
>
>
அஃறிணை
பஃறொடை
கஃறீது
முஃடீது


இங்கு நிலைமொழியீற்றில் உள்ள லகரமும் ளகரமும் வருமொழி முதலில் உள்ள தகரத்தோடு புணரும் போது ஆய்தமாகத் திரிந்துள்ளன. இவ்வாறு வருவதே புணர்மொழி ஆய்தம்.


நூற்பா


ஈறியல் மருங்கினும் இசைமை தோன்றும்.

(தொல். எழுத்து, மொழி. 6)


ஈறியல் மருங்கு = நிலைமொழியீறும் வருமொழி முதலும் புணர்தல்.

இசைமை = ஆய்த எழுத்தின் ஓசை.


இவ்வாறு புணர்ச்சியில் ஆய்தம் தோன்றுவது பற்றிப் பின்னர்ப் புள்ளி மயங்கியலில் விளக்கப் பெறும். (அலகு 5.1)


தனிமொழி ஆய்தம் தொடர்பான மற்றொரு கருத்து


ஆய்த எழுத்தைப் பற்றித் தொல்காப்பியர் மற்றொரு கருத்தையும் கூறுகிறார். நிறத்தையும், ஓசையையும் குறிக்கும் குறிப்பு மொழிகளில் ஆய்தம் இடம் பெறும். இது அருகிய வழக்கே என்கிறார்.


(எ-டு)


கஃறு (நிறம்), சுஃறு (இசை)


நச்சினார்க்கினியர் ஆய்தம் அளபெடுத்து வருவதை இங்குக் குறிப்பிடுகிறார்.


(எ-டு)


கஃறென்னும் கல்லதர் அத்தம்
சுஃறென்னும் தண்தோட்டுப் பெண்ணை


நூற்பா


உருவினும் இசையினும் அருகித் தோன்றும்
மொழிக்குறிப் பெல்லாம் எழுத்தின் இயலா
ஆய்தம் அஃகாக் காலை யான.

(தொல். எழுத்து. மொழி. 7)


ஆய்தம் தொடர்பான மொழியியல் கருத்துகள்


ஆய்தத்தை உரசொலி என்பர் மொழியியலார். புணர்மொழியில் வரும் ஆய்தங்கள் வெடிப்பொலிகளின் (வல்லினமெய்) மாற்று வடிவங்கள் என்கிறார் தெ.பொ.மீ. (தமிழ்மொழி வரலாறு, ப. 94,95) கல் + தீது = கற்றீது; முள் + தீது = முட்டீது என வரும் புணர்ச்சிகளில் ற், ட் எனும் வல்லினங்களுக்கு மாற்று வடிவமாக வருவது ஆய்தம். அதாவது ‘கற்றீது’ என்பது ‘கஃறீது’ எனவும் ‘முட்டீது’ என்பது முஃடீது எனவும் வரும்போது ற், ட் ஒலிகளுக்கு ஃ மாற்று வடிவமாக வருவது காணலாம். இதுபற்றிப் பின்னர் அலகு 5.1 இல் பாடத்தில் விரிவாகக் காணலாம். இந்த ஆய்த ஒலி வல்லெழுத்து ஆறன் மேல்நின்று அவற்றின் வல்லோசையை மென்மையாக்கி விடுகிறது. ‘அக்கு’ என்பதில் உள்ள ‘கு’வையும் அஃகு என்பதில் உள்ள ‘கு’ வையும் உச்சரித்து ஒப்பிடுங்கள். இதனை உணர்ந்த மாணிக்கநாயகர் பிறமொழிக்கண் காணப்படும் சில ஒலிகளை மென்மைப்படுத்த ஆய்தத்தைப் பயன்படுத்தலாம் என்று கூறிக் ‘காப்பி’யை காஃபி என்று எழுத வழிகாட்டினார்.


ஆய்தம் தொடர்பான இலக்கணக் கருத்துகளைத் தொகுத்துப் பாருங்கள்.


ஆய்தம் உயிரும் மெய்யும் அல்லாத தனிநிலை எழுத்து.


எனினும் மெய்க்குரிய அரை மாத்திரை பெறுவதால் ஒருவகையில் மெய்போலக் கொள்ளப்படும்.


ஆய்தம் தனிமொழியிலும் வரும்; புணர்மொழியிலும் வரும்.


குற்றெழுத்தின் பின்னாலும் வல்லின உயிர்மெய்க்கு முன்னரும் வரும். இதுவே ஆய்தத்துக்கு இடம்.


ஆய்தம் அளபெடுத்தும் வருவதுண்டு.


மொழியியலார் ஆய்தத்தை வெடிப்பொலிகளின் மாற்று வடிவங்களாகக் கொள்கின்றனர்.


ஆய்த எழுத்தைப் பிறமொழிச் சொற்களில் உள்ள வல்லெழுத்துகளை மென்மையாக்கப் பயன்படுத்தும் முயற்சி தமிழில் சிலரால் புகுத்தப்பட்டது

Thursday, October 21, 2010

மாரடைப்பு

உலகளவில் பெரும்பாலான மக்களின் மரணத்திற்கு மாரடைப்பே முதற்காரணம். நம் நாட்டில் ஆண்களானாலும், பெண்களானாலும் இளம் வயதிலேயே கடுமையான மாரடைப்புக்கு ஆளாவது அதிகரித்து வருகிறது. மாரடைப்பை பொறுத்தளவில் மற்ற நாடுகளுக்கும், நமக்கும் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது.

மற்ற நாடுகளை காட்டிலும், நம்நாட்டில் மாரடைப்பு இளம் வயதினரை (30 – 45) அதிகம் பாதிப்பது மட்டுமின்றி, அதன் வீரியமும், விளைவுகளும் மிகக் கடுமை.

மாரடைப்பு என்றால் என்ன?

அது எவ்வாறு ஏற்படுகிறது? யாருக்கெல்லாம் மாரடைப்பு வரும்? அதன் அறிகுறிகள் என்ன? அதை குணப்படுத்துவது எவ்வாறு? இந்த கேள்விகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கம் என்கிறார் மதுரை அப்பல்லோ மருத்துவமனை இதய நோய் நிபுணர் டாக்டர் எஸ்.கே.பி. கருப்பையா. மாரடைப்பு என்றால் என்ன? ஒரு நாளில் சராசரியாக ஒரு லட்சம் முறை துடிக்கும் இதயம், ஒவ்வொரு துடிப்பின் போதும், உடலின் மற்ற பாகங்களுக்கு தேவையான உணவையும், ஆக்சிஜனையும் எடுத்து செல்லும் ரத்தத்தை, ரத்தக்குழாய்கள் வழியாக அனுப்புகிறது.

இதற்காக கடினமாக உழைக்கும் இதய தசைகளுக்கு தேவையான உணவையும், ஆக்சிஜனையும் எடுத்துச் செல்ல மூன்று முக்கிய ரத்தக்குழாய்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் இதயத்தின் வெவ்வேறு பாகங்களுக்கு ஆக்சிஜன் கலந்த ரத்தத்தை எடுத்து செல்கின்றன. இந்த ரத்தக்குழாய்களின் ரத்த ஓட்டத்திற்கு முதலில் சிறியதாக தடைக்கற்கள் போல அடைப்புகள் ஏற்படுகின்றன. சில காரணங்களால் இத்தடை கற்கள் பெரிதாகி உடைந்து, அதன்மேல் ரத்தம் உறைந்து ரத்தக்குழாயை முழுமையாக அடைத்து விடுகிறது. இதனால் இதயத்தின் அத்தசைப் பகுதி உணவும், ஆக்சிஜனும் கிடைக்கப் பெறாததால் செயலிழக்கிறது.

இதுவே மாரடைப்பு. இதய ரத்தக்குழாயில் அடைப்பு எப்படி ஏற்படுகிறது? ரத்தக்குழாயின் தசைச்சுவர் உள்ளிருந்து வெளியே மூன்று அடுக்குகளாக உள்ளது. இதில் முதல் இரண்டு அடுக்குகளுக்கு இடையில், பிறந்த ஓரிரு ஆண்டுகளிலேயே நூலாடை போல கொழுப்புச் சத்து (Fatty Streak) படிய துவங்குகிறது. காலப்போக்கில் சில காரணங்களால் அது வளர்ந்து கொழுப்பு படிவமாகி (Plaque) ரத்தத்தின் சீரான ஓட்டத்திற்கு தடைக்கற்களாக மாறுகிறது. ஒரு கட்டத்தில் இத்தடை மேட்டில் விரிசல் உருவாகி ரத்தக்குழாயினுள் வெடிக்கிறது. இதன் விளைவாக ரத்தத்தில் உள்ள சில அணுக்கள் இத்தடை மேட்டின் விரிசல் உள்ள பகுதியில் அமர்ந்து ரத்தத்தை உறைய வைத்து, ரத்தக்குழாயை முழுமையாக அடைத்துக் கொள்கிறது.

மாரடைப்பு வருவதற்கான காரணங்கள் என்ன?

காரணங்கள் இரண்டு. ஒன்று நம்மால் கட்டுப்படுத்த முடிந்தவை, மற்றொன்று நம் கட்டுப்பாட்டில் இல்லாதவை. கட்டுப்படுத்த முடிந்த காரணங்கள் – புகை பிடித்தல், உயர் ரத்தஅழுத்தம், உடலின் எடை, உடற்பயிற்சியின்மை, சர்க்கரை நோய். கட்டுப்பாட்டில் இல்லாத காரணங்கள் – வயது, பரம்பரயாக வரும் மரபணுத்தன்மை. இதுதவிர ரத்தக்குழாயில் எவ்வித அடைப்பு இன்றியும் மாரடைப்பு வரலாம். ஆனால் இது மிகச்சிலரையே பாதிக்கிறது. இதற்கு காரணம் திடீரென முழுமையாக அடைபடும் அளவிற்கு இதயத்தின் ரத்தக்குழாயில் ஏற்படும் கடுமையான இறுக்கம். இதற்கான அறிவியல் பூர்வமான காரணம் இன்னும் தெரியாவிட்டாலும், இவ்வகை மாரடைப்பு, புகை பிடிப்போர், கொக்கைன் போன்ற மருந்து உட்கொள்வோர், மிகவும் குளிர்வான பகுதிகளுக்கு செல்வோர், மிக அதிகமாக உணர்ச்சிவசப்படுவோரை அதிகம் பாதிக்கிறது.
மாரடைப்பின் அறிகுறிகள்? மாரடைப்பு வருவதற்கான எச்சரிக்கை அறிகுறி, ஒவ்வொரு நபருக்கும் வெவ்வேறு விதமாக இருக்கலாம். பொதுவாக மாரடைப்பு வரும் போது முதலில் மெதுவாக நெஞ்சுவலியுடனோ அல்லது நெஞ்சில் ஒருவித கனமான இறுக்கத்துடனோ துவங்கி, பின் அவ்வலியின் தன்மை படிப்படியாக அதிகரிக்கலாம். சிலருக்கு இத்தகைய உணர்வுகள் ஏதுமின்றியும் வரலாம். இவர்களுக்கு மாரடைப்பு வந்திருப்பதே பின்னாளில் வேறொரு காரணத்திற்காக இ.சி.ஜி., அல்லது எக்கோ பரிசோதனை செய்யும் போது தான் தெரியவே வரும். இதற்கு “அமைதியான மாரடைப்பு’ என்று பெயர்.

இதய வலியின் வெவ்வேறு தன்மைகள்:

பொதுவாக இதய வலி நெஞ்சின் நடுப்பகுதியில் வரும். அது வலியாகவோ, ஒருவித அழுத்தமாகவோ, ஏதோ ஒரு கனமான பொருளை நெஞ்சில் சுமப்பது போன்ற உணர்வாகவோ, நெஞ்சின் இரு பகுதியில் இருந்தும் நடுப்பகுதியை நோக்கி கயிற்றால் இறுக்குவது போலவோ, நெஞ்சு முழுவதும் ஏதோ முழுமையாக நிறைவாக இருப்பது போன்ற உணர்வுடனோ இருக்கலாம்.

சில நேரங்களில் சாப்பாடு செரிக்காமல் உண்டாகும் அஜீரண கோளாறு போன்ற உணர்வாகவும் வெளிப்படலாம். நெஞ்சுக்குள் எரிச்சல் போன்ற உணர்வு இருக்கலாம். இத்தகைய உணர்வுகள் சில நிமிடங்கள் தொடர்ச்சியாகவோ, விட்டுவிட்டோ வரலாம். பொதுவாக இத்தகைய உணர்வுகள் தொடர்ச்சியாக 20 நிமிடங்களுக்கு மேல் இருந்தால் அது மாரடைப்பாக இருக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

மாரடைப்பு வரும் முன் சில நாட்களோ, வாரங்களோ, ஏன் சில மாதங்களுக்கு முன்பே கூட மேற்கூறிய அறிகுறிகள் தென்படலாம். அத்தகைய வலி ஏதாவது செயலில் ஈடுபட்டிருக்கும் போது (நடைப்பயிற்சி அல்லது கனமான வேலைகள்) சில நிமிடங்கள் வரும். ஓய்வு எடுத்தவுடன் மறைந்து விடும்.

இதற்கு “ஆஞ்சைனா’ என்று பெயர். நாளடைவில் முன்பை விட குறைவான செயல்பாட்டிலேயே அத்தகைய வலி வந்தால் அல்லது ஓய்வுக்கு பின்னும் அவ்வலி உடனே மறையாமல் இருந்தால் அதுவே மாரடைப்பின் ஆரம்ப அறிகுறி.

மேற்கூறிய வலி நெஞ்சின் நடுப்பாகத்தில் இல்லாமல் ஒரு பக்கமோ அல்லது இரண்டு பக்க கைகளிலோ, நடுமுதுகிலோ, கழுத்திலோ, முகத்தாடையிலோ, வயிற்றிலோ கூட வரலாம். இத்தகைய வலியுடன் வாந்தியெடுப்பது போன்ற உணர்வு, வாந்தி எடுத்தல், தலைச் சுற்றல், அதிக வியர்வை போன்றவையும் மாரடைப்பின் அறிகுறிகள்.

Friday, September 24, 2010

செவ்வாய் மற்றும் நிலவில் விவசாயம் செய்யலாம்

செவ்வாய் மற்றும் நிலவில் பழங்கள் மற்றும் காய்கறிகள் பயிரிட முடியுமா என்ற ஆராய்ச்சியில், அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். பல்கலை வளாகத்தில் நிலவின் தட்ப வெப்பத்தை ஒத்த சூழலில் ஒரு பரிசோதனைக் கூடம் உருவாக்கப்பட்டு செடிகள் பராமரிக்கப்பட்டதில் இந்தத் தகவல் தெரியவந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.



ஆராய்ச்சியில் தெரியவந்துள்ள தகவல்களின் விவரம்: பூமியில் இருந்து செடிகளை இரு கிரகங்களுக்கும் எடுத்துச் சென்று வளர்க்க முடியும். இதன் முதல் கட்டமாக உருளை, பட்டாணி, தக்காளி, மிளகு உள்ளிட்ட சில காய்கறிகளை உற்பத்தி செய்ய உரிய நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நிலவில் இவற்றை புதைத்து வைத்தால் போதும் செடிகள் துளிர்க்கத் துவங்கிவிடும்.



அதிக அளவு தண்ணீர் தேவைப்படாது. விதை மற்றும் குழல் வடிவ தாவரங்களின் கிளைகளில் உள்ள ஈரப்பதமே அவற்றின் வளர்ச்சிக்கு பெரிதும் துணை புரியும். 30 நாட்களில் காய்த்து குலுங்கத் துவங்கும். ஒரு ரோபோவை பூமியில் இருந்து ரிமோட் மூலம் இயக்கி, நிலவு மற்றும் செவ்வாய் கிரகங்களில் தோட்டத்தைப் பராமரிக்க முடியும். இவ்வாறு ஆராய்ச்சி முடிவுகளை அடுக்குகிறார்கள் விஞ்ஞானிகள்

Wednesday, September 22, 2010

பாட்டு

ஆ...ஞா ஆ...ஞா ஆ...ஞா


பாட்டும் நானே பாவமும் நானே
பாடும் உனை நான் பாடவைப்பேனே – (பாட்டும்)

கூத்தும் இசையும் கூற்றின் முறையும்
காட்டும் என்னிடம் கதை சொல்ல வந்தாயோ – (பாட்டும்)

அசையும் பொருளில் இசையும் நானே
ஆடும் கலையின் நாயகன் நானே
எதிலும் இயங்கும் இயக்கமும் நானே (2)
என்னிசை நின்றால் அடங்கும் உலகே…

நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே (2)
அறிவாய் மனிதா உன் ஆணவம் பெரிதா
ஆடவா எனவே ஆடவந்ததொரு
பாடும் வாயினையே மூடவந்ததொரு – (பாட்டும்)




பாத்தா பசுமரம் படுக்கவெச்சா நெடுமரம்
சேத்தா வெறகுக்காகுமா ஞானத் தங்கமே
தீயிலிட்டா கரியும் மிஞ்சுமா ஞானத் தங்கமே
தீயிலிட்டா கரியும் மிஞ்சுமா

(பாத்தா)

கட்டழகு மேனியைப்பார் பொட்டும் பூவுமா - வீட்டுக்
கட்டிலிலே படுத்துவிட்டா காசுக்காகுமா
வட்டமிடும் காளையைப்பார் வாட்டசாட்டமா (2) - கூனு
விழுந்துவிட்டா ஒடம்பு இந்த ஆட்டம் போடுமா

(பாத்தா)

பொன்னும் பொருளும் மூட்ட கட்டி போட்டு வெச்சாரு (2) - இவரு
போன வருஷம் மழைய நம்பி வெத வெதச்சாரு
ஏட்டுக் கணக்க மாத்தி மாத்தி எழுதிவெச்சாரு - ஈசன்
போட்ட கணக்கு மாறவில்ல போய் விழுந்தாரு (2)

(பாத்தா)

????
பத்து பிள்ள பெத்த பின்னும் எட்டுமாசமா
?????

(பாத்தா)





ஒன்றானவன் உருவில் இரண்டானவன்
உருவான செந்தமிழில் மூன்றானவன்
நன்கான வேதத்தில் நான்கானவன்
நமச்சிவாயம் என ஐந்தானவன்

உயிர்ச் சுவைகளிலே ஆறானவன்
இன்னிசை சுரங்கலிலே ஏழானவன்
எத்திக்கும் திசைகளிலே எட்டானவன்
தித்திக்கும் நவரச வித்தானவன்

பத்தானவன் நெஞ்சில் பற்றானவன்
பன்னிருகை வேலவனைப் பெற்றானவன்
முத்தாவன் மூல முதலானவன்
முன்னைக்கும் பின்னைக்கும் நடுவானவன்

ஆணாகிப் பெண்ணாகி நின்றானவன்
அவையொன்று தானென்று சொன்னானவன்
தான் பாதி உமை பாதி என்றானவன்
சரிபாதி பெண்மைக்குத் தந்தானவன்

காற்றானவன் கொடியானவன்
நீரானவன் நெருப்பானவன்
நேற்றாகி இன்றாகி என்றைக்கும் நிலையாகி
ஊற்றாகி நின்றானவன் அன்பில்
ஒளியாகி நின்றானவன்




பழம் நீயப்பா ஞானப் பழம் நீயப்பா
தமிழ் ஞானப் பழம் நீயப்பா

சபைதன்னில் திருச்சபைதன்னில்
????

(பழம்)

ஊருண்டு பேருண்டு உறவுண்டு சுகமுண்டு
உற்றார் பெற்றாருண்டு
நீருண்ட மேகங்கள் நின்றாடும் சபைதன்னில்
நீவாழ இடமும் உண்டு
பாலுண்டு பழமுண்டு ????

ஆறுவது சினம் கூறுவது தமிழ்
அறியாத சிறுவனா நீ
மாறுவது மனம் சேறுவது இனம்
தெரியாத முருகனா நீ
ஏறுமயில் ஏறு ஈசனிடம் நாடு
????
ஏற்றுக்கொள்வாய் கூட்டிச்செல்வேன்
என்னுடன் ஓடிவா நீ (2)

இன்பம்

கற்பனை

செய்யதெரிந்தவருக்கு காதல் இன்பம்

தியாகம்

புரிய துணிந்தவருக்கு சாதலும் இன்பம்..

வாழ்வை

ருசிக்கத்தெரிந்தவருக்கே கடமை இன்பம்

சாவை

அஞ்சாதவனுக்கு சாதிக்க இன்பம்

வளர

நினைப்பவனுக்கு வலியும் இன்பம்

மன்னிக்க

எண்ணுபவனுக்கு மறதி இன்பம்

தனிமையானவனுக்கு

உரிமையோடான கண்டிப்பும் இன்பம்

அனுபவிக்க

தெரிந்தவனுக்கே துன்பமும் இன்பம்..

இன்னும் வளர்க்கலாம் ..................