ஆ...ஞா ஆ...ஞா ஆ...ஞா
பாட்டும் நானே பாவமும் நானே
பாடும் உனை நான் பாடவைப்பேனே – (பாட்டும்)
கூத்தும் இசையும் கூற்றின் முறையும்
காட்டும் என்னிடம் கதை சொல்ல வந்தாயோ – (பாட்டும்)
அசையும் பொருளில் இசையும் நானே
ஆடும் கலையின் நாயகன் நானே
எதிலும் இயங்கும் இயக்கமும் நானே (2)
என்னிசை நின்றால் அடங்கும் உலகே…
நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே (2)
அறிவாய் மனிதா உன் ஆணவம் பெரிதா
ஆடவா எனவே ஆடவந்ததொரு
பாடும் வாயினையே மூடவந்ததொரு – (பாட்டும்)
பாத்தா பசுமரம் படுக்கவெச்சா நெடுமரம்
சேத்தா வெறகுக்காகுமா ஞானத் தங்கமே
தீயிலிட்டா கரியும் மிஞ்சுமா ஞானத் தங்கமே
தீயிலிட்டா கரியும் மிஞ்சுமா
(பாத்தா)
கட்டழகு மேனியைப்பார் பொட்டும் பூவுமா - வீட்டுக்
கட்டிலிலே படுத்துவிட்டா காசுக்காகுமா
வட்டமிடும் காளையைப்பார் வாட்டசாட்டமா (2) - கூனு
விழுந்துவிட்டா ஒடம்பு இந்த ஆட்டம் போடுமா
(பாத்தா)
பொன்னும் பொருளும் மூட்ட கட்டி போட்டு வெச்சாரு (2) - இவரு
போன வருஷம் மழைய நம்பி வெத வெதச்சாரு
ஏட்டுக் கணக்க மாத்தி மாத்தி எழுதிவெச்சாரு - ஈசன்
போட்ட கணக்கு மாறவில்ல போய் விழுந்தாரு (2)
(பாத்தா)
????
பத்து பிள்ள பெத்த பின்னும் எட்டுமாசமா
?????
(பாத்தா)
ஒன்றானவன் உருவில் இரண்டானவன்
உருவான செந்தமிழில் மூன்றானவன்
நன்கான வேதத்தில் நான்கானவன்
நமச்சிவாயம் என ஐந்தானவன்
உயிர்ச் சுவைகளிலே ஆறானவன்
இன்னிசை சுரங்கலிலே ஏழானவன்
எத்திக்கும் திசைகளிலே எட்டானவன்
தித்திக்கும் நவரச வித்தானவன்
பத்தானவன் நெஞ்சில் பற்றானவன்
பன்னிருகை வேலவனைப் பெற்றானவன்
முத்தாவன் மூல முதலானவன்
முன்னைக்கும் பின்னைக்கும் நடுவானவன்
ஆணாகிப் பெண்ணாகி நின்றானவன்
அவையொன்று தானென்று சொன்னானவன்
தான் பாதி உமை பாதி என்றானவன்
சரிபாதி பெண்மைக்குத் தந்தானவன்
காற்றானவன் கொடியானவன்
நீரானவன் நெருப்பானவன்
நேற்றாகி இன்றாகி என்றைக்கும் நிலையாகி
ஊற்றாகி நின்றானவன் அன்பில்
ஒளியாகி நின்றானவன்
பழம் நீயப்பா ஞானப் பழம் நீயப்பா
தமிழ் ஞானப் பழம் நீயப்பா
சபைதன்னில் திருச்சபைதன்னில்
????
(பழம்)
ஊருண்டு பேருண்டு உறவுண்டு சுகமுண்டு
உற்றார் பெற்றாருண்டு
நீருண்ட மேகங்கள் நின்றாடும் சபைதன்னில்
நீவாழ இடமும் உண்டு
பாலுண்டு பழமுண்டு ????
ஆறுவது சினம் கூறுவது தமிழ்
அறியாத சிறுவனா நீ
மாறுவது மனம் சேறுவது இனம்
தெரியாத முருகனா நீ
ஏறுமயில் ஏறு ஈசனிடம் நாடு
????
ஏற்றுக்கொள்வாய் கூட்டிச்செல்வேன்
என்னுடன் ஓடிவா நீ (2)
No comments:
Post a Comment