Tamil FM

Tamil FM

Thirukural

1 அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு

2 கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின்

3 மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்

நிலமிசை நீடுவாழ் வார்

4 வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு

யாண்டும் இடும்பை இல

5 இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்

பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு

6 பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க

நெறிநின்றார் நீடுவாழ் வார்

7 தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்

மனக்கவலை மாற்றல் அரிது

8 அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்

பிறவாழி நீந்தல் அரிது

9 கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்

தாளை வணங்காத் தலை

10 பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

இறைவன் அடிசேரா தார்

11

வான்சிறப்பு

வான்நின்று உலகம் வழங்கி வருதலால்

தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று

12

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்

துப்பாய தூஉம் மழை

13

விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து

உள்நின்று உடற்றும் பசி

14

ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்

வாரி வளங்குன்றிக் கால்

15

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே

எடுப்பதூஉம் எல்லாம் மழை

16

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே

பசும்புல் தலைகாண்பு அரிது

17

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி

தான்நல்கா தாகி விடின்

18

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்

வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு

19

தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்

வானம் வழங்கா தெனின்

20

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்

வான்இன்று அமையாது ஒழுக்கு

21

நீத்தார் பெருமை

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து

வேண்டும் பனுவல் துணிவு

22

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து

இறந்தாரை எண்ணிக்கொண் டற்று

23

இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்

பெருமை பிறங்கிற்று உலகு

24

உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்

வரனென்னும் வைப்பிற்கோர் வித்து

25

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்

இந்திரனே சாலுங் கரி

26

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்

செயற்கரிய செய்கலா தார்

27

சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்

வகைதெரிவான் கட்டே உலகு

28

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து

மறைமொழி காட்டி விடும்

29

குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி

கணமேயும் காத்தல் அரிது

30

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர் க்கும்

செந்தண்மை பூண்டொழுக லான்

31

அறன்வலியுறுத்தல்

சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு

ஆக்கம் எவனோ உயிர்க்கு

32

அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை

மறத்தலின் ஊங்கில்லை கேடு

33

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே

செல்லும்வாய் எல்லாஞ் செயல்

34

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்

ஆகுல நீர பிற

35

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்

இழுக்கா இயன்றது அறம்

36

அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது

பொன்றுங்கால் பொன்றாத் துணை

37

அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை

பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை

38

வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்

வாழ்நாள் வழியடைக்கும் கல்

39

அறத்தான் வருவதே இன்பம் மற் றெல்லாம்

புறத்த புகழும் இல

40

செயற்பால தோரும் அறனே ஒருவற்கு

உயற்பால தோரும் பழி

41

இல்லறவியல்

இல்வாழ்க்கை

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்

நல்லாற்றின் நின்ற துணை

42

துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும்

இல்வாழ்வான் என்பான் துணை

43

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு

ஐம்புலத்தாறு ஓம்பல் தலை

44

பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை

வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்

45

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது

46

அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்

போஒய்ப் பெறுவ தெவன்?

47

இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்

முயல்வாருள் எல்லாம் தலை

48

ஆற்றின் ஒழுக் கி அறனிழுக்கா இல்வாழ் க்கை

நோற்பாரின் நோன்மை உடைத்து

49

அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்

பிறன்பழிப்ப தில்லாயின் நன்று

50

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உநற்யும்

தெய்வத்துள் வைக்கப் படும்

Friday, July 16, 2010

ஈயும் எறும்பும்

ஈயும் எறும்பும்


ஓர் ஈயும் எறும்பும் ஒரு நாள் தங்கள் பெருமைகளைப் பற்றி வாதஞ் செய்தன.

ஈ : ஊர்ந்து செல்லும் அற்பப் பூச்சியாகிய உனக்கு என்னோடு ஒப்பிட்டுப் பேசுவதற்கு அருகதை இருக்கிறதா? நான் ஊர்வதில்லை; பறவையைப் போல மேலே பறக்கிறேன்; அரண்மனைகளுக்குள் தங்கு தடையில்லாமல் போகிறேன்; ராஜாக்கள், சக்கரவர்த்திகள் முடிகள்மீத உட்காருகிறேன்; அழகான ராணிகளின் தாமரை போன்ற முகங்களில் அமருகிறேன். அது மட்டுமா? தெய்வங்களின் மூலஸ்தானங்களுக்கும் போகிறேன். அங்கே நான் ருசிபார்க்காத நெய்வேத்தியங்களே கிடையாது. எப்பேர்ப்பட்ட விருந்தானாலும் சா¢, நான் போய் ருசி பார்க்கிறேன். உயர்ந்த சாப்பாடுகளையும், பானங்களையும் நான் அருந்துகிறேன். உன்னைப் போல ஒன்றிரண்டு பருக்கைகளைக் கொண்டு பல நாட்களைத் தள்ளுகிற வழக்கம் எனக்கில்லை.

எறும்பு : ரொம்ப அழகுதான். நான் சொல்லுகிறேன் கேள். உன் விருந்துகளைப் பற்றிப் பிரமாதமாய்ப் பேசுகிறாய்! ஆனால், உனக்குச் சாப்பாடு எது என்பது உன் இஷ்டத்தைப் பொறுத்ததல்ல. சில சமயம் நீ சாப்பிடும் சாப்பாடு இருக்கிறதே, அப்பப்பா! யார் என்ன கொடுத்தாலும் நான் அதைத் தொடக்கூட மாட்டேன். என்னவோ ராஜாக்கள் மீது இருந்தாலும் சா¢, கழுதைகள் மீது நீ இருந்தாலும் சா¢, நீ போய் அமர்ந்த உடனேயே வெறுப்புக் கொண்டு அவர்கள் உன்னை விரட்டுகிறார்கள். அப்புறம் நெய்வேத்தியங்கள் வேறு உனக்கு! அங்கெல்லாம் உன்னைப் பார்த்த உடனேயே என்ன வரவேற்பு! விரட்டு விரட்டென்று விரட்டுகிறார்கள். மழைக்காலங்களில் கூட என் உழைப்பினால் சேகா¢த்தவைகளைச் சாப்பிட்டுக்கொண்டு நான் செளகா¢யமாய் இருக்கிறேன்! ஆனால் நீயோ மழைக் காலங்களில் குளிராலும், பட்டினியாலும் சாகிறாய். சா¢, உன்னுடன் பேசி என் நேரத்தை வீணாக்க நான் பி¡¢யப்படவில்லை. பேசுவதால் என் வாயோ, வயிறோ நிரம்பப் போவதில்லை.

உழைப்பின் பலனே உண்மையான சுகம்.

No comments:

Post a Comment